இசை, பாடல் இரண்டும் இரண்டறக் கலந்த அம்சமாகும். சிற்சில இடங்களிலேயே அவைகள் தனித்து நிற்கின்றன. பாடல் இசையின்றிப் பாடப்படுகின்ற பொழுது அனுமதிக்கின்ற இஸ்லாம் அவை இணைகின்றபோது இரண்டையும் வன்மையாகத் தடைசெய்வதை அல்குர்ஆன், அஸ்ஸ{ன்னா வைக்கொண்டு தெளிவுபடுத்துவது இந்தக் கட்டுரையின் நோக்கம். 01. وَمِنَ النَّاسِ مَنْ يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَنْ سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ (6) لقمان : 6 “மனிதரில் அறிவின்றி அல்லாஹ்வின் வழியிலிருந்து வழிகெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குகின்றவர்களும் இருக்கின்றனர். அதனைப் பரிகாசமாகவும் எடுக்கின்றனர். இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனையுண்டு.” (லுக்மான்:06) வீணான செய்திகள் ஏராளமாக இருந்தாலும் விலைக்கு வாங்கல் என்ற வர்ணிப்பிற்கொத்த அம்சம் என்ன என்பதை பின்வருகின்ற, சட்ட ரீதியாக ஹதீஸின் தரத்தில் அமைந்த இரண்டு அதர்களும் தெளிவுபடுத்துகின்றன.